புதிதாக அமைய உள்ள திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.ரூ. 325 கோடிமதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசானது அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளஅடியனூத்துகிராமத்தில்8.61 ஹெக்டர் பரபரப்பளவில் இந்த மருத்துவ கல்லூரிக்கு நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று காலை நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் புதியதாக உருவாகவுள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.