அதிகாரங்களை ஒற்றைப்புள்ளியில் குவிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகிவிடும்-தினகரன்

ஆர்.டி.ஐ  சட்டத் திருத்த மசோதா தொடர்பாக  அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,  ஆர்.டி.ஐ. சட்டத்திருத்த மசோதா தகவல் அறியும்

ஆர்.டி.ஐ  சட்டத் திருத்த மசோதா தொடர்பாக  அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,  ஆர்.டி.ஐ. சட்டத்திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப்போகச் செய்யும்.அரசுக்கும் சாமானியர்களுக்கு பாலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருந்தது.

ஆனால்  தன்னாட்சி அமைப்பை மத்திய அரசு தனது அதிகாரத்துக்குள் கொண்டுவர முயற்சிப்பது சரியல்ல. அதிகாரங்களை ஒற்றைப்புள்ளியில் குவிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகிவிடும். ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற விடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்க வேண்டும் என்று  தினகரன் தெரிவித்துள்ளார்.