புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா இலவச அரிசி வழங்கும் திட்டத்தின்படி 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதத்திற்கான அரிசி புதுச்சேரில் உள்ள அனைத்து சிவப்பு அட்டை அட்டைதாரர்களுக்கும் நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் அனைத்து நபர் பகுதிகளிலும் இலவசமாக அரிசி வினியோகம் நடைபெற உள்ளது.
ஆகவே சிவப்பு அட்டை பயனாளிகள் அனைவரும் வழக்கம்போல தங்கள் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் மற்றும் சமூதாய நலக்கூடங்களில் இலவச அரிசியை 20-3-2022 தேதிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகின்றது. மேலும் மேற்படி இலவச அரிசி பெறாதவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அரிசி விநியோகம் நடைபெரும் மையங்களுக்கு வரும் பயனாளிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வருவதோடு சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node