இது எங்கள் கடைசி உரையாடலாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது-பிரதமர் மோடி உருக்கம்

I did not know this would be our last conversation — Prime Minister Modi

இந்திய விளையாட்டு துறையின் மிகப்பெரிய ஜாம்பவான் மில்கா சிங் கொரோனாவால் காலமானார்.மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல்.

புகழ்பெற்ற இந்திய ஸ்ப்ரிண்டர் மில்கா சிங் கடந்த ஒரு மாத காலமாக கொரோனாவுக்கு எதிராக  சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள கொரோனாவுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைவு  உள்ளிட்ட சிக்கல்களால்  சிகிச்சை பெற்று வந்தார்.இவர் புதன்கிழமை தான் வைரஸுக்கு எதிர்மறையை பரிசோதித்து வீடு திரும்பிய 2 நாட்களில் காலமாகியுள்ளார்.அவருக்கு வயது 91.

மில்கா சிங் இறப்பு பற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,ஸ்ரீ மில்கா சிங் ஜி இறப்பால் நாம் ஒரு மகத்தான விளையாட்டு வீரரை இழந்துவிட்டோம்.அவர் நாட்டின் வளர்ச்சி பற்றிய அதிக கற்பனையைப் கொண்டவர் மற்றும் எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தை பிடித்துள்ளார்.

unknown node

அவரது எழுச்சியூட்டும் ஆளுமை மில்லியன் கணக்கானவர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.”நான் சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீ மில்கா சிங் ஜியுடன் பேசினேன். இது எங்கள் கடைசி உரையாடலாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

பல வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் அவரது வாழ்க்கை பயணத்திலிருந்து பலம் பெறுவார்கள். அவரது குடும்பத்தினருக்கும் உலகெங்கிலும் உள்ள பல ரசிகர்களுக்கும் எனது இரங்கல் , “என்று அவர் மற்றொரு ட்வீட்டில் கூறினார்.

unknown node