இபிஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்..! ஓபிஎஸ் அணி பதில் மனு தாக்கல்!

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் பதில் மனு தாக்கல்.

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் பதில் மனு தாக்கல்.

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளாக போட்டியிட உள்ளது. தொடர்ந்து அதிமுகவில் குழப்பங்கள் நீடித்துவரும் நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இரு அணிகள் மத்தியிலும் நிலவுகிறது.

unknown node

இந்த நிலையில், கடந்த 29-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு  இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

unknown node

மேலும் அதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட வேட்பு மனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மூன்று நாட்களுக்குள் தேர்தல் ஆணையமும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பதில் அளிக்க கோரி பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு விசாரணையை  ஒத்திவைத்தனர்.

unknown node

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவுக்கு  ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அங்கீகரிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை சேர்க்க கோருவதையும், பொதுக்குழு விவகாரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இபிஎஸ்-ன் இந்த மனு நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.