#BREAKING: ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு..!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலின் போது இந்திய மாணவர் ஒருவர் இறந்ததை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்தது.

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலின் போது இந்திய மாணவர் ஒருவர் இறந்ததை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்தது.

உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில், உக்ரைனில் உள்ள தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன. இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய படைகள் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் மாணவரின் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. உயிரிழந்த மாணவர் கர்நாடகாவை சார்ந்தவர்.  கார்கிவ் நகரிலிருந்து வெளியேற ரயில் நிலையத்திற்கு செல்லும்போது குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உக்ரைன் , ரஷ்யா தூதர்களிடம் இந்திய வலியுறுத்தல்.

unknown node