தொண்டர்கள் வராததால் மநீம தலைவர் கமல்ஹாசன் அதிருப்தி.!

Kamal Haasan is unhappy that the People's Makkal Needhi Maiam did not get the expected number of volunteers for the party's 4th year inauguration.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால் கமல்ஹாசன் அதிருப்தி.

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு, எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால் 10 மணிக்கு தொடங்கி இருக்க வேண்டிய நிகழ்ச்சி 2 மணிநேரம் தமதமாகியும் தொடங்கவில்லை.

நான்காம் ஆண்டு தொடக்க விழாவுக்கு வந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கேரவன் வாகனத்தைவிட்டு இறங்காமல் 2 மணிநேரம் காத்துக்கொண்டிருக்கிறார் என கூறப்படுகிறது.

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 10,000 பேர் அமரக்கூடிய அரங்கில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3000 பேர் கூட வராததால் ஏமாற்றம் நிலை உளது என தகவல் கூறப்படுகிறது.