பிரதமர் மோடியை அமெரிக்க நாடாளுமன்றத்தில், இரண்டாவது முறையாக சிறப்புரையாற்ற அழைத்தது குறித்து வானதி சீனிவாசன் ட்வீட்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில், இரண்டாவது முறையாக சிறப்புரையாற்ற, அமெரிக்க நாட்டு அரசு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து வானத்து சீனிவாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘உலக நாடுகள் கொண்டாடும் நம்ம பிரதமர் மோடி! MODI THE BOSS நெல்சன் மண்டேலா, வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற உலக புகழ் பெற்ற பெருந்தலைவர்கள் உரையாற்றிய அமெரிக்க நாடாளுமன்றத்தில், இரண்டாவது முறையாக சிறப்புரையாற்ற, அந்நாட்டு அரசே நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுத்திருப்பது, நம் நாட்டிற்கும் நம் மக்களும் கிடைத்திருக்கும் மாபெரும் கெளரவம்!’ என பதிவிட்டுள்ளார்.
unknown node