ஹரியானா முன்னாள் முதல்வர் ஹூடா மீது சிறப்பு சிபிஐ நீதிமன்றம் வழக்கு பதிவு

Special CBI court files case against former Haryana Chief Minister Hooda

பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஹரியானாவின் முன்னாள்  முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மீது சோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்) மறு ஒதுக்கீடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 420 (மோசடி) மற்றும் 120-பி (குற்றவியல் சதித்திட்டம்) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 (1) (ஈ) ஆகியவற்றின் கீழ் ஹூடா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அண்மையில்  ஹூடா மற்றும் காங்கிரஸ் தலைவர் மோதி லால் வோரா ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டனர் .வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் ஹூடா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் மே 7 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று அவரது  வழக்கறிஞர் கூறினார்.