3,184 சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
காவலர்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் அத்துறையை சார்ந்த பணியாளர்கள் உட்பட 3,184 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் மு.கஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல்துறையில் 3 ஆயிரம் பணியாளர்கள், தீயணைப்புத் துறையில் 118 அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்பட உள்ளது. பதக்கம் பெறுவோருக்கு மாதாந்திர பதக்கப்படி ரூ.400 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.