நாட்டில் அதிக கடன்பட்டுள்ள மாநிலம் பஞ்சாப் தான் – நவ்ஜோத் சிங் சித்து!

Punjab State Congress leader Navjot Singh Sidhu has said that Punjab is the most indebted state in the country.

நாட்டில் அதிக கடன்பட்டுள்ள மாநிலம் பஞ்சாப் தான் என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அவர்கள்  பஞ்சாப் மாநிலத்தின் நிலை குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நிதிப் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை தான் பஞ்சாப்பின் தூண்கள் என கூறியுள்ளார்.

மேலும் நாட்டில் அதிக அளவில் கடன் வாங்கியுள்ள மாநிலம் பஞ்சாப் தான். எங்கள் செலவுகளில் பாதி கடன் பெற்று தான் செய்யப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலங்களின் வளங்களை திருடுவதை நிறுத்திக் கொண்டால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

நாட்டில் அதிக கடன்பட்டுள்ள மாநிலம் பஞ்சாப் தான் – நவ்ஜோத் சிங் சித்து!