நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.!

Communist Party of India Secretary of State mutharasan Movement has said that the agreement will be signed tomorrow.

நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகிக்கிறது என்று அனைவரும் தெரியும். வேறு பல கட்சிகளும் கூட்டணியில் உள்ளன. வரும் சட்டப்பேரவையில் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக இன்றைக்கும் டிஆர் பாலு தலைமையிலான திமுக குழுவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்ராயன் தலைமையிலான குழுவும் கலந்துகொண்டு, திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது. நாளை இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும். எத்தனை தொகுதிகள் என்பதை அப்போது தெரிவிக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.