இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 200 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 200 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக,மகாராஷ்டிராவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 54 பேரில் 28 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல,டெல்லியில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 54 பேரில் 12 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,தமிழகத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
unknown node