இந்தியாவுக்கு 25 மில்லியன் டோஸ் தடுப்பூசி;அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ்,பிரதமருடன் பேச்சு...!

US Vice President Kamala Harris talks with Prime Minister Narendra Modi on providing 25 million doses of corona vaccine to India

அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ்,இந்தியாவுக்கு 25 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் மோடியுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக,இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி,தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால்,தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது.

இதற்கிடையில்,உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின்படி, 2.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வெளிநாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில்,அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ்,ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவைத் தெரிவிக்க,பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது,25 மில்லியன்(2.5 கோடி )டோஸ் உயிர்காக்கும் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்புவதாக உறுதியளித்தார்.

மேலும்,கொரோனா தடுப்பூசி உற்பத்தி உள்பட இரு நாடுகளுக்கு இடையேயான சுகாதார வினியோக சங்கிலியை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் பற்றி கமலா ஹாரிஸ்,பிரதமர் மோடியிடம் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.