வங்கி மோசடி வழக்கு ! சிவசேனா எம்.பி. மனைவி மீண்டும் ஆஜராக சம்மன்

Varsha Raut, wife of Shiv Sena MP Sanjay Raut appeared before the ED in the PMC Bank fraud case, the agency again summoned

பி.எம்.சி வங்கி மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவை மீண்டும் ஜனவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பி.எம்.சி வங்கி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த வழக்கில் ரூ.95 கோடி கடன் பெற்றதாக பிரவீன் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டார்.மேலும் இந்த வழக்கின் விசாரணையில் , பிரவீன் ராவத்  தனது மனைவியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 60 லட்சம் செலுத்தியதும் ,சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவிற்கு ரூ.55 லட்சம் வட்டி இல்லாத கடனாக அனுப்பியதும் தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா நேரில் ஆஜராக அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் ,அதை தவிர்த்து வந்தார்.இறுதியாக கடந்த 4-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.இந்நிலையில் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா மீண்டும் ஜனவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அரசியலில் உள்ள எதிரிகளை துன்புறுத்துவதற்கும் ,அவர்களை மவுனமாக்குவதற்கும் மத்திய விசாரணை நிறுவனங்களான  அமலாக்கத்துறை, சிபிஐ  மற்றும் வருமான வரித்துறை போன்றவற்றை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாகவும் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.