திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் 2 நபர்கள் அத்துமீறிய விவகாரத்தில், பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரும் கைது.
சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்த செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இதற்க்கு அண்ணாமலை, ஓபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், சென்னை, விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் 2 நபர்கள் அத்துமீறிய விவகாரத்தில், பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.