ஏபி டிவில்லியர்ஸ் ஆர்சிபி அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் – விராட் கோலி..!!

Captain Virat Kohli says AB de Villiers should continue to play for Royal Challengers Bangalore

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஏபி டிவில்லியர்ஸ் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 22 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது, இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். அதன் படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தனர். இதில் ஏபி டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 75* ரன்கள் எடுத்தார். அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து, இதனால் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் போட்டி முடுத்தவுடன் பேசிய பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி ஏபி டிவில்லியர்ஸ்ஸை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறியது ” முதலில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து விக்கெட்களை இழந்தோம் அடுத்ததாக ஏபி டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடிதன் மூலம் அணிக்கு நல்ல ரன் கிடைத்தது. ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 5 மாதங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை இருந்தாலும் அவர் இப்போது சிறப்பாக விளையாடுகிறார். இனி அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடமாட்டார் என்று நினைக்கவில்லை. ஆர்சிபி அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.