நேற்றைய போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
நிதானமாக விளையாடிய டிமுத் கருணாரட்ன 30 ரன்னில் விக்கெட்டை பறி கொடுத்தார்.பின்னர் இறங்கிய திருமன்னன் சிறிது நேரம் குசால் பெரேரா உடன் கூட்டணியில் விளையாடினர்.
பிறகு திருமன்னன் 25 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து வந்த குசன்ஸ் மெண்டிஸ் 2 ரன்னிலும்,ஏஞ்சலோ மேத்யூஸ் 0 ரன்னிலும், தனஞ்சய டி சில்வா 0 ரன்னிலும் , திஸ்ர பெரேரா 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இறுதியாக இலங்கை 36.5 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக Duckworth முறைப்படி 41 ஓவராக மாற்றப்பட்டு 187 இலக்காக நிர்ணயித்தனர்.ஆப்கானிஸ்தான் அணிபந்து வீச்சில் முகமது நபி நான்கு விக்கெட்டை பறித்தார்.
பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விக்கெட்டை பறி கொடுத்தது.இறுதியாக 32.4 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இலங்கை அணியில் நுவன் பிரதீப் நான்கு விக்கெட்டையும் ,லசித் மலிங்கா மூன்று விக்கெட்டையும் வீழ்த்தினார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…