#T20 World Cup: பாகிஸ்தானுக்கு 148 ரன்கள் இலக்கு வைத்த ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான ஆப்கானிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ஷாஜாத் 8, ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய் டக் அவுட் ஆனார்கள். அடுத்து இறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ், அஸ்கர் ஆப்கான் தலா 10 ரன்கள் எடுத்தனர். இதனால், ஆப்கானிஸ்தான் 64 ரன்னிற்கு 5 விக்கெட்டை இழந்து 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய நஜிபுல்லா சத்ரன் நிதானமாக விளையாடி 22 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் மத்தியில் இறங்கிய கேப்டன் முகமது நபி , குல்பாடின் நைப் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இறுதியாக ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர். கடைசிவரை களத்தில் முகமது நபி , குல்பாடின் நைப் தலா 35* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றனர்.
பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம் 2 , ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷதாப் கான் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025