ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டை பறித்த வீரர்களில் இந்திய அணி வீரர்கள் 3 பேர் இடம் பிடித்தனர்!

Published by
murugan

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணி உடன்  மோதியது . இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற்றது.போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷாமிக் 4 விக்கெட்டையும் , வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ,சுழல் பந்து வீச்சாளர் சாஹல் இருவரும் தலா இரு விக்கெட்டையும் பறித்தனர்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டை பறித்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணியை சார்ந்த மூன்று வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர்.இந்த வருடம் நடந்த ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டை பறித்த வீரர்களில் நியூஸிலாந்து அணியை சார்ந்த ட்ரெண்ட் போல்ட் 30 , லாக்கி பெர்குசன் 29 விக்கெட்டை பறித்து முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.
மூன்றாம்  இடத்தில் 28 விக்கெட்டை பறித்து ஆஸ்திரேலிய அணியை சார்ந்த பேட் கம்மின்ஸ் உள்ளார்.அடுத்த மூன்று இடத்தில் இந்திய அணியை சார்ந்த  முகமது ஷாமிக் , புவனேஷ்வர் குமார், உஸ்வேந்திர சாஹல் ஆகியோர் உள்ளனர்.இப்பட்டியலில் இந்திய அணியின் வீரர்களின் ஆதிக்கமே அதிகம் உள்ளது.
30-ட்ரெண்ட் போல்ட்
29 -லாக்கி பெர்குசன்
28 – பேட் கம்மின்ஸ்
25 – முகமது ஷாமிக்
24 – புவனேஷ்வர் குமார்
24 -உஸ்வேந்திர சாஹல்

Published by
murugan

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

3 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

4 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

4 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

5 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

5 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

6 hours ago