#IPL2020: பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை இலக்கு நிர்ணயித்த பெங்களூரு.!

Default Image

இன்றைய 31-வது போட்டியில் பெங்களூர் Vs பஞ்சாப் அணிகள்மோதி வருகிறது. இப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த படிக்கல் 18 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்த இரண்டு ஒவரில் ஆரோன் பிஞ்ச் 20 ரன்னில் விக்கெட்டை இழக்க , பின்னர் களம் கண்ட கேப்டன் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.

சிறப்பாக விளையாடி வந்த கோலி அரைசதம் அடிக்காமல் 48 ரன்னில் பெவிலியன் சென்றார். பின்னர், இறங்கிய சிவம் துபே 23, கிறிஸ் மோரிஸ் 25 ரன் எடுக்க  இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணி 172 ரன்கள் இலக்குடன் களமிறங்கி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi