டி20 தொடரில் முக்கிய வீரர்கள் விலகல் – பிசிசிஐ அறிவிப்பு ..!

Deepak Sahar, Suryakumar Yadav withdraw from India squad for T20 series against Sri Lanka

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் விலகல்

நாளை இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக முதல் டி20  போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் பேட்டர் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.  இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஃபீல்டிங் செய்யும்போது சூர்யகுமாருக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல தீபக் பந்துவீச்சின் போது வலது நாற்புறத்தில் காயம் ஏற்பட்டது.  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது  போட்டியில் தீபக் சாஹர் 2-வது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசினார். இந்த போட்டியில் தீபக் சாஹர் 2 விக்கெட் பறித்தார்.  சூர்யகுமார் யாதவ்  65 ரன்கள் விளாசினார்.  இவர்கள் தங்கள் காயங்களை குணப்படுத்த பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்கின்றனர்.

unknown node

இந்திய டி20 அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், மொஹ்திப் யாதவ், சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான் ஆகியோர் இடமபெற்றுள்ளனர்.