நேற்றைய 29-வது ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர்.
பின்னர், 168 ரன்கள் இலக்குடன் இறங்கிய ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
நேற்றைய போட்டியில் 168 இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடி வந்தபோது 11 பந்துகளில் 25 ரன்கள் எடுக்கத் தேவைப்பட்டது. அப்போது, பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்கூர், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஒரு தொடர்ந்து பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வீசிய பந்து ரஷீத் கான் பேட்டின் கீழ் சென்றது.
இதைப்பார்த்து, நடுவர் வைடு கொடுக்க கையைத் தூக்கிய போது தோனி இல்லை என்றதும் தனது முடிவை நாம் பெயர் மாற்றினார் இதனால், தற்போது இது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
unknown node