ஐபிஎல் தொடர் முடிந்து இந்திய அணி உலககோப்பைக்காக போட்டியில் விளையாட இங்கிலாந்து செல்ல உள்ளது.இந்நிலையில் உலககோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி பற்றி பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மாற்றும் முன்னாள் அணி வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeதோனி பற்றியும் அவருடைய அனுபவம் குறித்தும் தோனியின் நெருங்கிய நண்பரும் பீகார் அணி வீரருமான சத்ய பிரகாஷ் ஸ்போர்ட்ஸ் ஸ்டாரிடம் பகிர்ந்தார்.
அதில் நாங்கள் எல்லோரும் தோனியை தீவிரவாதி என்று தான் அழைப்போம்.என்று கூறியுள்ளார். களத்துக்கு தோனி சென்றால் 20 பந்துகளில் 40 முதல் 50 ரன்கள் அடித்து நெருக்கி விடுவார்.அனால் தாய் நாட்டுக்காக ஆடும்போது மட்டும் அவர் துறவியைப் போல ஆகிவிட்டார்.மேலும் தன்னை முழுவதுமாக விளையாட்டிற்காக மாற்றி கொண்டார்.
unknown nodeஅப்போ எல்லாம் தோனி கேப்டன் ஷிப் செய்தது கிடையாது.ஆனால் இன்று உலகத்தில் சிறந்து விளங்கக் கூடிய வீரர்களுக்கு கேப்டனாக இருக்கிறார்.எங்களோடு ஆடும் போது ஹிந்தியில் மட்டுமே பேசுவார் ஆங்கிலத்தில் பேசமாட்டார்..
unknown nodeஆனால் இப்பொழுது அவர் பேசும் ஆங்கிலமே அழகு தான் மிகவும் நன்றாக சரளாமாக ஆங்கிலத்தில் பேசுகிறார்.
unknown nodeஎன்று தோனியுடனும் உள்ள நட்பு பற்றி மிகவும் ஆழமாக கூறினார்.மேலும் இவர் தோனி கிரிக்கெட் வாழ்க்கையில் ஆரம்ப காலக்கட்டத்தில் நிறைய உதவிகள் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இன்னும் நாங்கள் நல்ல நண்பராக உள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்த உலகத்தில் எதையும் எதிர்பார்க்காமல் சுக, துக்கத்தில் பங்கு கொள்ளும் ஒரே உறவு நண்பன் மட்டுமே என்றால் அது மிகையாகாது.ஒரு சிறந்த நண்பன் ஆயிரம் உறவுகளுக்கு சமம்.