விராட்கோலியிடம் திறமை குறைந்த அணியை விட்டு சென்றது தோனி- கௌதம் கம்பீர்.!

Published by
பால முருகன்

விராட்கோலியிடம் திறமை குறைந்த அணியை விட்டு சென்றது தோனி என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபலமான வீரரான கௌதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தோனி மற்றும் விராட் கோலி பற்றி கூறியுள்ளார், அதில் அவர் கூறியது, திறமை குறைந்த அணியை கேப்டன் தோனி விராட் கோலியிடம் ஒப்படைத்துள்ளார்.

தோனி கேப்டனாக இருக்கும் பொழுது அவருக்கு திறமையான அணி வீரர்கள் கொடுக்கப்பட்டது, அதனால் தான் அவரால் பல கோப்பை களை வெல்ல முடிந்தது, ஆனால் கோலி கேப்டனாக இருக்கும் பொழுது அவருக்கு திறமை இழந்த அணி கொடுக்கப்பட்டது அதனால் ஐசிசி கோப்பைகளை வெல்ல விராட் கோலியால் வெல்ல முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

விராட் கோலி கடந்த 2014 ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மேலும் 2017 ம் ஆண்டு அணைத்து போட்டிகளிலும் கேப்டனாக பொறுப்பேற்றார். இதுவரை அவருடைய கேப்டன்ஷியல் விளையாடப்பட்ட 55 போட்டிகளில் கிட்ட தட்ட 33 போட்டிகளில் வெற்றி பெற்று அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை பெற்றவர் என்றும் கூறியுள்ளார்.

அதற்கு பிறகு பேசிய அவர் விராட் கோலியின் மீது ஐசிசியின் கோப்பைகளை வெற்றி கொள்ளவில்லை என்ற குற்றசாட்டு உள்ளது, மேலும் இதனால் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது என்றும் கௌதம் கம்பீர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

18 minutes ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

1 hour ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

2 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

2 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

3 hours ago

நோட் பண்ணிக்கோங்க இந்த வருஷம் கப் ஆர்சிபிக்கு தான்! அடிச்சு சொல்லும் ஏபி டிவிலியர்ஸ்!

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…

3 hours ago