பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோட் ஷோவை தொடங்கிய நிலையில், வழிநெடுக திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் திமுக தெற்கில் இருந்து தொடங்கும் வகையில் நாளை மதுரை மாவட்டத்தில் பிரமாண்டமாக பொதுக்குழு ஒன்றை நடத்துகிறது.
எனவே, நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு முன்பு இன்று மதுரை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை நடைபெறும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார் எனவும், மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை சுமார் 25 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ நடக்கும் எனவும் தகவல்கள் முன்னதாக வெளியாகி இருந்தது.
அந்த தகவலை போலவே இன்று மதுரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். இவர் வருகை தருவதை பார்த்த திமுக தொண்டர்களும், ஆதரவாளர்களும் வழிநெடுக நின்று அவருக்கு உற்சாக வரவேற்பை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த இந்த உற்சாக வரவேற்பில் மகிழ்ச்சியான முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழே இறங்கி சிறுது தூரம் நடந்துகொண்டு அங்கு இருந்த மக்களுக்கு கைகொடுத்தார்.
இதனை பார்த்த சிலர் கையில் மனுக்களையும் எடுத்து கொண்டுவந்து முதல்வரை சந்தித்து கொடுத்தார்கள். அத்தனையும் வாங்கி கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளை கொஞ்சினார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.