“கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் விளையாட வர வேண்டாம்”- ஆஸ்திரேலியா அமைச்சர்!

Default Image

“கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க முடியாது என்றால், இந்திய வீரர்கள் யாரும் விளையாட வர வேண்டாம்” என குயிண்ட்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது. இதனால் சிட்னி சென்றடைந்த இந்திய அணி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, பிரித்வி ஷா, நவதீப் சைனி, சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய வீரர்கள், கொரோனா விதிகளை மீறி உணவகத்திற்கு சென்றது, சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில், விதிகளை மீறிய அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள குயிண்ட்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ், “கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க முடியாது என்றால், இந்திய வீரர்கள் யாரும் விளையாட வர வேண்டாம்” என தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த கருத்தால் பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai