“அதானிக்கு கடன் வழங்கவேண்டாம்” இந்தியா-ஆஸி..போட்டியில் பரபரப்பு…!

Default Image

இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. போட்டியின் போது, ​​இளைஞர் இருவர் மைதானத்தில் அதானி குழுவுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து பதாகையுடன் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பதாகையில் அதானி குழுமத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 1 பில்லியன் கடனை வழங்கக்கூடாது என்று எழுதப்பட்டது. அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக எதிர்ப்பு எழுந்து வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் சுரங்கப்பணிகளைத் தொடங்க கடந்த ஆண்டு இறுதி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.

போட்டியை ஒளிபரப்பை நிறுத்தி சோனி:

இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் சோனி சிக்ஸ் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழும்போது பொதுவாக நேரடி ஒளிபரப்பு தொடரும், ஆனால் தற்போதைய போட்டியில் அதானிக்கு எதிராக இளைஞர் மைதானத்தில் பதாகையுடன் சென்றதை, ​​சோனி தொலைக்காட்சி  சிறிது நேரம் போட்டியை நிறுத்திவிட்டு விளம்பரத்தை ஒளிபரப்பத் தொடங்கினார். இந்த போட்டியை காண ஆஸ்திரேலியாவில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி ஏன் எதிர்க்கப்படுகிறார்?

அதானி குழுமம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் ஒரு நிலக்கரி சுரங்கத்தை வாங்கியது, மேலும், அதில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது, ஆனால் நிலக்கரி சுரங்கம் சுற்றுச்சூழலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும், இது ஆஸ்திரேலியாவில் வெள்ளம் மற்றும் வறட்சிக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

ஆனால், காலநிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அதானி உறுதியளித்த போதிலும், எதிர்ப்புக்கள் தொடர்கின்றன. கார்பன் மாசுபாட்டை வானிலைக்கு பரப்பி, இந்த திட்டம் நிலத்தடி நீர் வளங்களை குறைக்கும் என்று எதிர்ப்பாளர்கள் நம்புகின்றனர். இதனால், அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்களின் கலாச்சாரம் முடிவுக்கு வரும். இந்த விஷயங்கள் காரணமாக, அதானியின் திட்டத்திற்கு  கடந்த 4 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

எஸ்.பி.ஐ கடன் கொடுக்க வேண்டாம்:

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்த திட்டத்திற்காக அதானி குழுமத்திற்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்க உள்ளது. “அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடனை எஸ்.பி.ஐ வழங்கக்கூடாது” என்றுஇன்றைய போட்டியின் போது இளைஞர் இருவர் மைதானத்தில் பதாகையுடன் ஓடினர்.

இதற்கு முன் கடந்த 21 ஆம் தேதி, ஆஸ்திரேலியாவின் மார்காவோவில் உள்ள ஒரு எஸ்.பி.ஐ கிளைக்கு முன்னால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர், அப்போது அதானியின் கடன் விண்ணப்பத்தை வங்கி ஏற்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 06042025
War Mock Drill in India
BJP Lady Person murder in Pattukottai Tanjore district
MIGM Exp successfully tested by NAVY and DRDO
Vadakadu Riot - Pudukottai Police
SRHvDC - IPL2025
Hyderabad vs Delhi