“இனிமே டென்ஷன் ஆகாதீங்க” இப்ப ஃபைன் கட்டுங்க! அஸ்வினுக்கு அபராதம் போட்ட TNPL!
TNPL-ல் போட்டியில் அஸ்வின் நிதானமிழந்து செய்த செயலுக்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

கோவை : ஐபிஎல் தொடர் முடிந்து இப்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 8-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி தடுமாறி விளையாடி 10 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது.
போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அஸ்வின் தொடக்கத்தில் சரியாக விளையாடினாலும் கூட போக போக கொஞ்சம் தடுமாறினார் என்று சொல்லவேண்டும். இறுதியாக, 4-வது ஓவரை வீச வந்த சாய் கிஷோர் கடைசி பந்தில் அற்புதமாக ஸ்டிக் லைனில் போட்டு அஸ்வினை LBW-ஆக்கினார். சாய் கிஷோர் நடுவரிடம் அப்பில் செய்த நிலையில் அவுட் கொடுக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத அஸ்வின் மேம் இது அவுட் இல்லை என்பது போல பெண் நடுவரிடம் கோபப்பட்டார்.
ஆனால், பெண் நடுவரும் இது அவுட் தான் என கூறினார். அஸ்வினால் ரிவியூவும் எடுக்க முடியவில்லை ஏனென்றால், ஏற்கனவே அவருடைய அணி வீரர்கள் 2 முறை ரிவியூவ் எடுத்து அது தோல்வியில் முடிந்தது. எனவே, அஸ்வினால் ரிவியூவும் கேட்கமுடியவில்லை நடுவர் சொன்ன முடிவை ஏற்க முடியாமல் மிகவும் கோபத்துடன் பேட்டை வைத்து தன்னுடைய கால்களில் அடித்துக்கொண்டு பெவிலியனை நோக்கி நடந்து சென்றார்.
View this post on Instagram
இப்படியான சூழலில் வீடியோ வைரலாக பரவிய நிலையில் இதனை பார்த்தவுடனே தெரிகிறது அவுட் என்று பிறகு எதற்கு நடுவரிடம் வாக்கு வாதம் செய்துவிட்டு இவ்வளவு கோபம் ஏன் என பலரும் சமூக வலைத்தள பக்கங்களில் கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள். இதனைத்தொடர்ந்து போட்டியில் கோபப்பட்டு விதிமுறைகளை மீறியதாக TNPL நிர்வாகம் அஸ்வினுக்கு அபராதம் விதித்து இது போன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது.
அதன்படி, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டது, அதாவது 10% அவர் அவுட் ஆனபிறகு நடுவரிடம் சென்று வாக்குவாதம் செய்ததற்கும் 20 % கிரிக்கெட் உபகரணங்களை தவறாக பயன்படுத்தியதற்கு ( பேட்டை வைத்து பேடில் அடித்ததற்காக) விதிக்கப்பட்டது. சரியான ரூபாய் தொகை குறிப்பிடப்படவில்லை, ஏனெனில் போட்டி கட்டணம் வீரருக்கு வீரர் மாறுபடும்.
உதாரணமாக, அஸ்வின் நட்சத்திர வீரர் என்பதால் அவரது போட்டி கட்டணம் 1 லட்சம் ரூபாய் இருக்கலாம். எனவே, அவருடைய ஒரு நாள் போட்டி சம்பளம் 1 லட்சம் இருந்தது என்றால், அபராதம் 30,000 ரூபாய் இருக்கும். ஆனால், இது எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை கணிப்பு செய்து வெளியிடப்பட்ட தகவல் என்பதும் குறிப்பிடத்தக்கது.