முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்த இங்கிலாந்து.. 4 விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா..!

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 33 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டன் ஜோ ரூட், டொமினிக் சிப்லே இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடி விளையாடி வந்த டொமினிக் சிப்லே சதம் அடிக்காமல் 87 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 89.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 263 ரன்கள் எடுத்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து அதிரடி காட்டி வந்த கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் விளாசி 218 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 555 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இங்கிலாந்து 578 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பும்ரா, ,அஸ்வின் தலா 3 விக்கெட்டும், ஷாபாஸ் நதீம், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
இதைத்தொடர்ந்து, இறங்கிய இந்திய அணி தற்போது 4 விக்கெட்டை இழந்து 73 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி டொமினிக் பெஸ், ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டை பறித்தனர். தொடக்க வீரர்கள் சுப்மான் கில் 29, ரோஹித் 6 ரன்களுடன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.