#England vs India: 4வது டெஸ்ட் – டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சு!

India bat first in the 4th Test against England at the London Oval

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி.

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தற்போதய தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டியில் இஷாந்த் சர்மா, முகமது சமிக்கு பதில், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்ற உள்ளது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்ததால், இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர். இந்த நிலையில், இன்று 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களம் இறங்கியுள்ளனர்.

இந்திய அணியின் வீரர்கள் (Playing XI):

ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சேதேஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த் (wk), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து அணி வீரர்கள் (Playing XI):

ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீட், டேவிட் மாலன், ஜோ ரூட் (கேப்டன்), ஒல்லி போப், ஜானி பேர்ஸ்டோ (wk), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், கிரேக் ஓவர்டன், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.