#INDvENG: முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து.. தொடரை கைப்பற்றுமா?

The ODI series between India and England starts today. In this match, England won the toss and elected to bowl.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை கைப்பற்றியது. அதனைதொடர்ந்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், இன்று முதல் 28 ஆம் தேதி வரை புனேவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை இந்திய அணி அறிவித்தது. இதில் பும்ரா, ஷமி, ரவிந்திர ஜடேஜா, மயங்க் அகர்வால்க்கு வாய்ப்பு வழங்கவில்லை. இங்கிலாந்து அணியை பொறுத்தளவில், காயம் காரணமாக அர்ச்சர் தொடரில் இருந்து வெளியேறினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்:

இந்தியா:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, கிருணல் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா.

இங்கிலாந்து:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டவ், ஈயோன் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், மொயீன் அலி, சாம் குர்ரான், டாம் குர்ரான், அடில் ரஷீத், மார்க் வூட்.