பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலிக்கு “Z பிரிவு” பாதுகாப்பாக அதிகரிப்பு!

பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை Z பிரிவாக உயர்த்த மேற்கு வங்க அரசு முடிவு.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை மேற்கு வங்க அரசு Z பிரிவுக்கு உயர்த்தியுள்ளது. கங்குலிக்கு வழங்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது Z பிரிவு உயர்த்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.
கங்குலியின் ஒய் பிரிவு பாதுகாப்பின் காலம் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பாக மேற்கு வங்க அரசு மறு ஆய்வு செய்தது. இதில், கங்குலியின் பாதுகாப்பு வளையத்தை இசட் வகைக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய Z பிரிவு பாதுகாப்பு ஏற்பாட்டின்படி, முன்னாள் பிசிசிஐ தலைவருக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025