அரைசதம் விளாசிய மத்தேயு வேட் , மேக்ஸ்வெல்.. 187 ரன்கள் இலக்கு வைத்த பின்ச் படை..!

Australia lost 5 wickets at the end of 20 overs and scored 186 runs. The Indian team will start with a target of 187 runs.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளிடையே கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மத்தேயு வேட், ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே பிஞ்ச் ரன் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதையடுத்து களமிறங்கிய ஸ்மித் 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் மேக்ஸ்வெல்,  மத்தேயு வேட் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கை உயர்த்தினார்.

சிறப்பாக விளையாடி வந்த இருவரும் அரை சதம் விளாசினர். அதிரடியாக விளையாடி வந்த மேக்ஸ்வெல் 54, மத்தேயு வேட் 80 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசியாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 186 ரன்கள் எடுத்தனர். 187 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

இன்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தினர். இதற்கு முன் முதல் டி20 போட்டியிலும் மேக்ஸ்வெல் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.