பிசிசிஐ:இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் தற்போது நடந்து முடிந்த இந்த டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைய இருந்தது.
இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ கடந்த 1 மாதமாக இருந்து வந்தது. மேலும், அதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம் என பல நிபந்தனைகளுடன் தேர்வுகளையும் நடத்தினார்கள்.
அதில் பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் அடிபட்டது, அதில் குறிப்பாக கௌதம் கம்பீர் பெயர் அதிகமாக அடிப்பட்டு கொண்டே இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவர்தான் பயிற்சியாளர் என்று கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது.
அதன்படி, தற்போது இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயால் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா இந்த அதிகாரபூர்வ தகவலை அவர்களது X தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளனர்.
unknown node