கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்; பும்ரா, ஷ்ரேயஸ், அயர்லாந்து தொடருக்கு தயார்.!

காயத்திலிருந்து பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் மீண்டுள்ளதால், அயர்லாந்து தொடரில் விளையாடவுள்ளதாக தகவல்.
இந்தியா இந்த வருடம் இரண்டு மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை என இரண்டு தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளதை அடுத்து, மிகமுக்கியமாக இந்திய அணியில் காயம் காரணமாக நீண்ட காலமாக விளையாடாமல் இருந்த பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீண்டுள்ளனர்.
மேலும் இந்திய அணிக்கு இவர்களின் பங்கு கடந்த காலங்களில் மிக முக்கியமான ஒன்றாக இருந்திருக்கிறது. மேலும் இருவரும் வரும் ஆகஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக களமிறங்க உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் இந்திய அணியில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.