ஹேப்பி பர்த்டே மஹிந்திர சிங் தோனி! அசைக்க முடியாத தல தோனி உருவான விதம் ஒரு தொகுப்பு!

Published by
மணிகண்டன்

இந்திய கிரிக்கெட் வீரர், வெற்றிகரமான கேப்டன், ஐசிசி நடத்திய அணைத்து விதமான போட்டிகளிலும் கோப்பையை கைப்பற்றியுள்ளவர், எந்தவித சூழ்நிலையிலும் கோபப்படாமல் அணியை கூலாக வழிநடத்துபவர் என புகழப்படுகிறார் மஹேந்திர சிங் தோனி!

2007ஆம் ஆண்டு உலககோப்பை போட்டியில் தோற்ற பிறகு முதன் முறையாக நடைபெற இருந்த டி20 உலகோப்பையை கடுமையாக எதிர்த்து பின்னர் சீனியர் வீரர்கள் இல்லாத அணிக்கு தலைமை பொறுப்பு ஏற்று தனது தலைமையை நிரூபிக்க தொடங்கினார் நம்ம தல தோனி.

 

ஆரம்பமே வெற்றி கோப்பையுடன் தொடங்கினார் தோனி. பின்னர் ட்ராவிட் ஓய்வு பெற அதன் பிறகு அணியை வழிநடத்த கமிட்டி யோசிக்கையில் தோனி பெயரை பரிந்துரை செய்தார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்.

டோனி எப்போதும் எதிர்காலத்திற்க்கான அணியை கட்டமைப்பதில் உறுதியாய் இருப்பார். ஆதலால் அவர் மீது வைக்கப்பட்ட முக்கிய குற்றசாட்டு அவர் சீனியர் வீரர்களை புறந்தள்ளுகிறார். ஆனால் அவர் வலிமையான இந்திய அணியை உலகக்கோப்பைக்காக தயார் செய்து கொண்டிருந்தார்.

அவர் 50 ஓவர் போட்டிகள் விளையாடும் இந்திய அணியை வழிநடத்த தொடங்கிய போதே ஆஸ்திரேலியா அணியை அந்த நாட்டிலேயே அவர்களை தோற்கடித்து 22 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார் தோனி.

2009இல் கும்ளே ஓய்வு பெற மூன்று விதமான இந்திய அணிக்கும் கேப்டனாக தோனி மாறினார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளை தோற்கடித்து, முதன் முறையாக இந்திய அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது.

2011 உலகக்கோப்பை போட்டி பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. அணியில் ஒரு வீரராக சாதிக்காவிட்டாலும் அணி தலைவராக சிறப்பாக செயல்பட்டிருந்தார் தோனி. இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது =இந்திய அணி.

அதன் பிறகு 2013இல் நடைபெற்ற சேம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வென்று ஐசிசி நடத்திய அனைத்து விதமான போட்டிகளிலும் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார் தோனி.

ரோஹித் சர்மா, பும்ப்ரா, புவனேஷ்குமார் போன்ற திறமையான வீரர்களுக்கு அணியில் தொடர் இடம் வழங்கி எதிர்கால இந்திய அணியை வலிமையாக கட்டமைத்த அந்த கேப்டன் தோனி தனது கேப்டன் பொறுப்பை விளக்கி கொண்டு தற்போது அணியில் பொறுப்பும் அனுபவமும் உள்ள முக்கிய வீரராக வலம் வருகிறார் மஹிந்திர சிங் தோனி!

Published by
மணிகண்டன்

Recent Posts

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

5 minutes ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago