டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 47 ஆம் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – விருத்திமன் சஹா களமிறங்கினார்கள்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 34 பந்துகளில் 66 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சஹா 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக மனிஷ் பாண்டே 44 ரன்கள் அடித்து, 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் 2 விக்கெட்களை இழந்து, 219 ரன்களை டெல்லிக்கு இலக்காக நிர்ணயித்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் டெல்லி அணி சார்பாக நோர்ட்ஜ் மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரர்களான அஜின்கியா ரஹானே மற்றும் ஷிகர் தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் பெரிய ரன்களை அடிக்காமல் தடுமாற்றத்தை கண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியாக ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி 19 ஓவர் முடிவில் 131 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து, 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணி பந்துவீச்சை பொறுத்தளவில் ரஷீத் கான் 3, சந்தீப் சர்மா மற்றும் நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மேலும், டெல்லி அணி சார்பாக ரிஷாப் பந்த் அதிகபட்சமாக 35 பந்துகளில் 36 ரன்களும், அஜின்கியா ரஹானே 19 பந்துகளில் 26 ரன்களும் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…