#INDvENG: கேப்டன் மார்கன் விலகல்? தொடரை கைப்பற்றுவது யார்?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

The second ODI between India and England will be played in Pune today. This match will determine the victories of both teams.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் ஒருநாள் போட்டி இன்று புனேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இரு அணிகளின் வெற்றிகளை தீர்மானிப்பதால், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. தற்பொழுது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முத்ல் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனைதொடர்ந்து இரண்டாம் ஒருநாள் போட்டி, இன்று புனேவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும். அதேபோல இங்கிலாந்து அணி, டெஸ்ட், டி-20 தொடரை இழந்ததால், ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்புகள், ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக க்ருனால் பாண்டியா, அறிமுகமான முதல் போட்டியில் விரைவாக அரைசதம் விளாசி அசத்தினார். பிரசித் கிருஷ்ணாவும் புதிய சாதனை படைத்தார். காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விலகியதால், அவருக்கு பதில் சூரியகுமார் யாதவ் களமிறக்கிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியை பொறுத்தளவில் ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், மார்கன், பட்லர், மார்க் வுட், ஆதில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் மார்கனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. இன்றைய போட்டி, இரு அணிகளின் வெற்றிகளை தீர்மானிப்பதால், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.