உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்;3-வது நாள் ஆட்டம் லைவ்…விராட் கோலி,ரஹானே ஆட்டமிழப்பு…!

Published by
Edison

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி,துணை கேப்டன் ரஹானே ஆட்டமிழப்பு.

சவுத்தாம்ப்டனில் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் நிறுத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். நேற்றைய 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் விராட் கோலி 124 பந்துகளுக்கு 44 , ரஹானே 79 பந்துகளுக்கு 29 ரன்களுடன் இருந்தனர்.

இதனையடுத்து, இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில், காலையில் சவுத்தாம்ப்டனில் மழை பெய்தது. இதனால், மைதானம் ஈரப்பதமாக இருந்தது.இதைத்தொடர்ந்து,இந்திய நேரப்படி போட்டி 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,கைல் ஜேமீசன் வீசிய பந்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 44 ரன்களில் அவுட்டானார். இதனால்,இந்திய அணி 149 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது.இதனைத் தொடர்ந்து,ரிஷப் பந்த் 4 ரன்களில் அவுட் ஆனார்.இதன்காரணமாக,3 ஆம் நாள் ஆட்டத்தில் இந்தியா வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர், 77 ஓவர்கள் முடிவில் ரஹானே (42 *), ரவீந்திர ஜடேஜா (6 *) என்ற நிலையில் இருந்தனர்.

ஆனால்,சில நிமிடங்களில் துணை கேப்டன் ரஹானே 49 ரன்களில் அவுட் ஆனார்.இது இந்தியாவுக்கு மற்றொரு அடியாக இருந்தது.மேலும்,இந்திய அணியினர் 78.4 ஓவர்கள் முடிவில் 182 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்தனர்.

இதனைத் தொடர்ந்து,ரவிச்சந்திரன் அஸ்வின் அவுட் ஆனார்.தற்போது களத்திலுள்ள ரவீந்திர ஜடேஜா 43 பந்துக்கு 15 ரன்களும்,இஷாந்த் ஷர்மா 6 பந்துகளுக்கு 2 ரன்களும் எடுத்துள்ளனர். இதனால்,இந்திய அணியினர் 89 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 211 ரன்கள் எடுத்துள்ளனர்.தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.

Published by
Edison

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago