முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டை இழந்த இந்திய அணி..!

At the end of the first day's play, the Indian team lost 6 wickets at the end of 89 overs and scored 233 runs.

இந்தியா , ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர், ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே இரண்டாவது பந்திலேயே பிருத்வி ஷா ரன் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து  புஜாரா களம் இறங்கினார். பின்னர் சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் 17 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர், இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் புஜாரா இருவரும் நிதானமாக விளையாடிய அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த புஜாரா அரைசதம் அடிக்காமல் 43 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். நிதானமாக விளையாடிய  விராட் கோலி அரைசதம் அடித்து 74 உடன் தனது விக்கெட்டை இழந்தார் இதையடுத்து இறங்கிய ரகானே 47 ரன்களுடனும்பெவிலியன் திரும்பினார்.

இறுதியாக இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்து உள்ளன. தற்போது களத்தில் விருத்திமான் சஹா 9  அஸ்வின் 15 ரன்களுடனும் உள்ளனர்.