ruturaj gaikwad dhoni
CSK கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்கிறது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் நேற்று சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. இது தோனி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே தோனி விளையாடுகிறாரா? இல்லையா? என்பது போலவும் கேள்விகள் எழும்ப தொடங்கியது.
இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் மாற்றம் குறித்தும் தோனி குறித்தும் சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “என்னைப் பொறுத்தவரை தோனி எது செய்தாலும் அது நல்லதுக்கு தான் செய்வார் சென்னை அணிக்கு ருதுராஜ் கேப்டனாக செயல்படுவர் என்பது எங்களுக்கு தெரியவே தெரியாது.
ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் எல்லாம் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வில் தான் தோனி இதனை அறிவித்தார். இது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தோனி ஒரு முடிவை எடுக்கிறார் என்றால் அந்த முடிவை சரியானதாக இருக்கும் இரு நாங்கள் நம்புவோம். எனவே அவருடைய முடிவை நாங்கள் ஆதரித்தோம்.
அவருடைய முடிவை நாங்கள் மதிக்கவும் செய்கிறோம். தோனி என்னன்னவெல்லாம் சொல்கிறாரோ அது அனைத்தையும் நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுவோம் மற்றபடி இந்த முடிவு முழுக்க தோனி எடுத்த முடிவு தான். கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்ட முடிவு குறித்து ஜடேஜாவும் ஆதரித்துள்ளார்” எனவும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…