இந்தியா vs இங்கிலாந்து: சிறந்த வீரராக என்னை மாற்றியது சென்னை அணி- சாம் கரண்!

Published by
Edison

சென்னை அணிக்காக விளையாடிய குறுகிய காலத்தில் சிறந்த வீரராக மாறியதாக இங்கிலாந்து வீரர் சாம் கரண் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனைதொடர்ந்து டி-20 போட்டிகளும் தொடங்கவுள்ளது. இந்த டி-20 தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணியின் அதிரடி இளம் வீரர் சாம் கரண், இந்தியா வந்தடைந்தார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாம் கரண், கிரிக்கெட் குடும்பத்திலிருந்து வந்த இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஒப்பனிங், ஃபினிஷிங் என அனைத்து விதத்திலும் சிறப்பாக விளையாடி வந்தார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். மேலும் சாம் கரண், இந்த T20 உலகக்கோப்பை ஆண்டில் ஒரு முக்கிய அடையாளத்தை உருவாக்க வேண்டும் என எதிர்பார்கிறார்.

சாம் கரண், 2019 ஆம் ஆண்டில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடி  ஐபிஎல் தொடரில் தனது வெற்றியைப் பதிக்க ஆரம்பித்தார். பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவரை 2020 ஆம் ஆண்டு வாங்கியது. இவர் சென்னை அணிக்காக பவர் பிளே ஓவரில் விளையாடி, ரசிகர்கள் மத்தியில் அவருக்கென்று ஒரு இடத்தைப்  பிடித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்று முறை சாம்பியன்களுக்கான  சில இடங்களில்  ஒருவராக இருந்தார்.மேலும் தனது 20 வயதில் IPL போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இளம் பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் பெற்றார்.

இந்நிலையில் சாம் கரண், “ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய குறுகிய காலத்தில் சிறந்த வீரராக மாறினேன். மாறுபட்ட நிலைகளில், வெவேறு சவால்களை எதிர்கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

8 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

9 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

9 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

10 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

10 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

11 hours ago