ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியதன் மூலம், ஆசியக்கோப்பைக்கு முதன்முறையாக நேபாள கிரிக்கெட் அணி தகுதி.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஏசிசி பிரீமியர் கோப்பையை(50 ஓவர்) வென்ற நேபாள கிரிக்கெட் அணி முதன்முறையாக ஆசியக்கோப்பையில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியை வென்று நேபாள கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன்மூலம் நேபாள கிரிக்கெட் அணி, செப்டம்பரில் நடக்கும் ஆசியக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது, மேலும் அந்த அணி குரூப்-A வில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
unknown node