ஐபிஎல் : கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் அணியை தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிநடத்தி வருகிறார். பஞ்சாப் அணிக்காக 7.6 கோடி ரூபாய் விலைக்கு வாங்கப்பட்டார். இவர் தலைமையில் பஞ்சாப் அணி ஐபிஎல்-இல் 28 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. அதில் 12 போட்டியில் வெற்றியும், 16 போட்டியில் தோல்வியும் பெற்றுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் தொடக்க ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாளும், இரண்டு வருடமாக தகுதி சுற்றிற்க்கு முன்னேறாமல் போனதால் பஞ்சாப் அணி நிர்வாகம் சில அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. அதன்படி, முதலில் பயிற்சியாளர்களை அதிரடியாக நீக்கியது. அதனை அடுத்து 2020ஆம் ஆண்டு புதிய கேப்டனை கொண்டு பஞ்சாப் அணி களமிறங்கும் என அறிவிக்கபட்டிருந்தது.
தற்போது, அஸ்வினை டெல்லி அணிக்கு மாற்ற அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாம். அதற்கான பேச்சுவார்த்தையை டெல்லி அணியுடன், பஞ்சாப் அணிநிர்வாகம் நடத்தி வருகிறதாம். அதே நேரத்தில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…