#IPL2020: ராஜஸ்தான் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

இன்றைய 37-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக சாம் கரண் – டு பிளெசிஸ் களமிறங்கினர்.
எதிர்பாராதவிதமாக 10 ரன்கள் மட்டுமே அடித்து டு பிளெசிஸ் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய வாட்சன், 8 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த ராயுடு களமிறங்க, 22 ரன்களில் சாம் கரண் ஆட்டமிழந்தார். 13 ரன்களில் ராயுடு அவுட் ஆக, அடுத்த களமிறங்கிய தோனி நிதானமாக ஆடினார்.
28 ரன்களில் தோனி ஆட்டமிழக்க, இறுதியாக சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தனர். 126 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பென் ஸ்டோக்ஸ் 19 ரன்னில் விக்கெட்டை இழக்க
இவரை தொடர்ந்து, ராபின் உத்தப்பா 4 ரன் எடுத்து வெளியேற பின்னர், இறங்கிய சஞ்சு சாம்சன் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, ஜோஸ் பட்லர் ,ஸ்மித் இருவரும் சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடைசிவரை களத்தில் ஜோஸ் பட்லர் 70* ,ஸ்மித் 26* ரன்களுடன் நிற்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025