#RCB v DC: ஸ்ரீகர் பாரத், மேக்ஸ்வெல் அதிரடி… 7 விக்கெட் வித்தியாத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல் தொடரின் டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இன்றைய ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடித்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்து.

டெல்லி அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 48 ரன்களும், ஷிகர் தவான் 43 ரன்களும் எடுத்திருந்தனர். பெங்களூர் பந்துவீச்சை பொறுத்தளவில் முகமது சிராஜ் மட்டுமே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூரு அணி.

தொடக்க வீரர்களான தேவதூத் படிக்கல் டக் அவுட்டாக, கேப்டன் விராட் கோலி 4 ரன்னில் வெளியேறினார். இதன்பின் ஏபி டிவில்லியர்ஸ் 26 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஒருபக்கம் நிதானமாக விளையாடி வந்த ஸ்ரீகர் பாரத் 37 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த மேக்ஸ்வெல் 32 பந்துகளில் தனது அரைசதத்தை அடித்தார். இதன்பின் ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்ரீகர் பாரத் சிக்ஸ் அடித்து அதிரடியான வெற்றியை பெங்களூருக்கு பெற்று தந்தார். இதனால் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய ஸ்ரீகர் பாரத் 52 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்தார். மறுபக்கம் மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்காமல் இருந்தார். இந்த வெற்றியால் பெங்களூர் அணி புள்ளி பட்டியலை 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

டெல்லி அணி பந்துவீச்சை பொறுத்தளவில் அன்ரிச் நார்ட்ஜே 2, அக்சர் படேல் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 மட்டுமே இழந்து 166 ரன்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

புள்ளி பட்டியலில் டெல்லி 20 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சென்னை 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பெங்களூரு 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் மற்றும் கொல்கத்தா 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்து, ஆகிய நான்கு அணிகளும் குவாலிபர் ஆகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.!

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.!

சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…

36 minutes ago

மகளிர் உலக செஸ் சாம்பியன் .., 19 வயதில் வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்.!

ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…

49 minutes ago

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.., கொல்லப்பட்டவர்கள் பஹல்காம் தீவிரவாதிகளா?

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…

1 hour ago

”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!

டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…

2 hours ago

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

3 hours ago

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

4 hours ago