தோனி அமெரிக்கா வருவார்.. ஆனா அங்க வருவது கஷ்டம்.. ரோஹித் சர்மா!

Published by
பாலா கலியமூர்த்தி

Rohit Sharma: எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூ அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில் எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என ரோஹித் பிக் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாகனுடன் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கிளப் ப்ரேரி ஃபயர் என்ற பாட்காஸ்டில் கலந்துரையாடினார். அதில் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் இந்திய அணி வீரர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அப்போது ரோஹித் கூறியதாவது, ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார். அதுவும் கடைசி இரண்டு போட்டிகளில் அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது. அதேபோல் எங்களுக்கு எதிரான போட்டியில் எம்எஸ் தோனியின் அதிரடி ஆட்டமும் சிறப்பாக இருந்தது.

கடைசி ஓவரில் அவர் அடித்த 20 ரன்கள் தான் எங்கள் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று கூறினார். இதையடுத்து ரோஹித் கூறியதாவது, உலகக்கோப்பை தொடரின்போது எம்எஸ் தோனியை வெஸ்ட் இண்டீசுக்கு வருவார் என நம்புவது கடினமான ஒன்று, ஆனால் அவர் அமெரிக்காவில் இருப்பார் என்று கூறினார்.

தோனி கொஞ்சம் சோர்வாகவும் உடல் நலம் சரி இல்லாமல் இருப்பது போல் தெரிகிறது. இதனால் ஓய்வுக்காக அவர் அமெரிக்கா வர வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் எம்எஸ் கோல்ஃப் விளையாடி வருகிறார். இதற்காக கூட  அமெரிக்கா வருவார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

11 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

12 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

12 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

13 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

13 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

14 hours ago