rohith sharma and ms dhoni [file image]
Rohit Sharma: எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூ அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில் எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என ரோஹித் பிக் அப்டேட்டை கொடுத்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாகனுடன் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கிளப் ப்ரேரி ஃபயர் என்ற பாட்காஸ்டில் கலந்துரையாடினார். அதில் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் இந்திய அணி வீரர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
அப்போது ரோஹித் கூறியதாவது, ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார். அதுவும் கடைசி இரண்டு போட்டிகளில் அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது. அதேபோல் எங்களுக்கு எதிரான போட்டியில் எம்எஸ் தோனியின் அதிரடி ஆட்டமும் சிறப்பாக இருந்தது.
கடைசி ஓவரில் அவர் அடித்த 20 ரன்கள் தான் எங்கள் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று கூறினார். இதையடுத்து ரோஹித் கூறியதாவது, உலகக்கோப்பை தொடரின்போது எம்எஸ் தோனியை வெஸ்ட் இண்டீசுக்கு வருவார் என நம்புவது கடினமான ஒன்று, ஆனால் அவர் அமெரிக்காவில் இருப்பார் என்று கூறினார்.
தோனி கொஞ்சம் சோர்வாகவும் உடல் நலம் சரி இல்லாமல் இருப்பது போல் தெரிகிறது. இதனால் ஓய்வுக்காக அவர் அமெரிக்கா வர வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் எம்எஸ் கோல்ஃப் விளையாடி வருகிறார். இதற்காக கூட அமெரிக்கா வருவார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…