நேற்று உலகம் முழுவதும் புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது. இந்த புகைப்பட நாளில் நேற்று தங்களின் முக்கியமான புகைப்படங்களை அதன் நினைவுகளும் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வந்தனர்.
unknown nodeஅந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் , கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார். அதில் என் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணங்களை படம் பிடித்து நான் நினைவு கூறும் வகையில் அமைத்துக் கொடுத்த அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த புகைப்பட தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் அத்துடன் தனது புகைப்படங்களையும் சச்சின் பதிவிட்டுள்ளார்.