இன்றைய போட்டியில் இலங்கை , தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன இருவரும் களமிறங்கினர்.ஆட்டத்தின் முதல் ஓவரில் முதல் பந்திலே ரபாடா வீசிய பந்தில் திமுத் கருணாரத்ன விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் அவிஷ்கா பெர்னாண்டோ களமிறங்கினர்.
பெர்னாண்டோ , குசல் பெரேரா இருவரின் கூட்டணியில் ரன்கள் சற்று உயர்த்தினார். சிறப்பாக விளையாடிய பெர்னாண்டோ பத்தாவது ஓவரில் 30 ரன்களுடன் வெளியேறினர். தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சில் தடுமாறி விளையாடிய குசல் பெரேரா 30 ரன்னுடன் அவுட் ஆனார்.
அடுத்ததாக களமிறங்கிய குசல் மெண்டிஸ் 23 ரன் எடுத்து வெளியேற பிறகு களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.இறுதியாக இலங்கை அணி 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது.
தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சில் டுவைன் பிரிட்டோரியஸ் , கிறிஸ் மோரிஸ் தலா 3 விக்கெட்டையும் , ரபாடா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். 204 ரன்கள் இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்க உள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…